மலேசியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்தைக் காண ரசிகர்கள் அங்கு அதிக அளவில் திரண்டு வருகின்றனர். பந்தயக் களத்தில் அவர் நடந்து சென்றபோது, ரசிகர் ஒருவர் ‘தல’ என்று உரத்த குரலில் கத்தியதால், அங்கிருந்த பிற வீரர்களுக்கு இடையூறு ஏற்படுவதை அஜித் உணர்ந்தார்.
உடனே அந்த ரசிகரைத் திரும்பிப் பார்த்த அஜித், அமைதியாக இருக்கும்படி சைகை மூலம் எச்சரித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் அஜித், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64-வது படத்தின் பணிகளில் ஈடுபடவுள்ளார்.
இதற்கிடையில், அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ள நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவிற்கு அஜித்திற்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அஜித் இந்த விழாவில் கலந்து கொண்டால், அது தமிழ் திரையுலகில் ஒரு வரலாற்றுச் சம்பவமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…
'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…
சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…
ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் வீசிய வீரியமிக்க வெள்ளத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 53 வயதான 'ஜோய்மோதி' என்ற பெண்…