சிக்கலில் மாட்டிக்கொண்ட அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம்! எல்லாம் கூடி வர நேரத்துல் இப்படியா நடக்கனும்?

By Arun

Published on:

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெறுக்கொண்டிருக்கிறது. இதில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா கஸிண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

   

இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் “குட் பேட் அக்லி” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இத்திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் 5000 கோடி ரூபாய் முதலீட்டில் 12 திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாம். அதில் “குட் பேட் அக்லி” திரைப்படமும் ஒன்று. இந்த நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளதாக தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் இரண்டு தயாரிப்பாளர்களில் ஒருவரான நவீன் எர்னேனி, ஃபோன் ஒட்டுகேட்ட விவகாரம் ஒன்றில் சம்பந்தப்பட்டுள்ளதாக ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாம். இவரை கைது செய்ய போலீஸ் தயாரான நிலையில் இவர் தற்போது தலைமறைவாகிவிட்டாராம். இந்த விவகாரத்தால் அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

 

author avatar