பண மோசடி வழக்கில் நடிகர் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்எல்ஏ ஒருவரிடம் சுமார் 3.5 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் அஜய் வாண்டையாரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் நடைபெற்ற தகராறில், அஜய் வாண்டையார் மதுபோதையில் மற்றொரு தரப்பினரை தாக்கி வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அஜய் வாண்டையார் மீது பட்டினப்பாக்கம், எழும்பூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த புகார் தொடர்பாக அஜய் வாண்டையார் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே இது போன்ற வழக்கில் சிக்கியதால் இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபத்து குறித்த சிபிஐ விசாரணை 2026 ஜனவரியில்…
தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இனியன் சம்பத் இன்று காலமானார். 'சொல்லின் செல்வர்' என்று போற்றப்படும் ஈ.வி.கே.…
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் (CBFC) பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில்…
பாஜக நிர்வாகி சரத்குமார், 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு (Censor Board) தடை விதித்தது குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில்…
2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள், நகைக் கடன் பெறும் முறையில் முக்கிய…
திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன்பட்டியில், பழிக்குப்பழியாக கணவன் மற்றும் மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…