சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் (CBFC) பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பல அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகளுக்குத் தணிக்கை வாரியம் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், படக்குழுவினர் சில மாற்றங்களைச் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். குறிப்பாக, அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் படத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும், திராவிட அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ‘தீ பரவட்டும்’ என்ற வாசகத்திற்குப் பதிலாக, ‘நீதி பரவட்டும்’ என்று மாற்ற தணிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாற்றங்களைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நாளை ‘பராசக்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தணிக்கை வாரியத்தின் முட்டுக்கட்டைகளால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சான்றிதழ் கிடைத்துள்ளது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சமூக விழிப்புணர்வு மற்றும் அரசியல் நையாண்டி நிறைந்த படமாக இது அமைந்துள்ளதால், திரையரங்குகளில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…
ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…