போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் மீண்டும் ஒரு போர்ப் பதற்றத்தை பற்றவைத்துள்ளது. “நான்தான் பெரிய கை” என்ற தோரணையில் இஸ்ரேல் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையே தற்போது அரங்கேறி வரும் அத்தனை பஞ்சாயத்துகளுக்கும் முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. லெபனான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற ஈரானின் முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்ததால், இந்த மோதலில் ஈரான் தற்போது நேரடியாகக் களம் இறங்கியுள்ளது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் தனது இரண்டாம் கட்ட ஏவுகணைத் தாக்குதலை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. ஈரானின் தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய நகரங்களில் இஸ்ரேல் முன்னதாக நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் மிக முக்கியமான நெவாடிம் (Nevatim) மற்றும் டெல் நோஃப் (Tel Nof) ஆகிய இரண்டு விமானப்படை தளங்களை குறிவைத்துத் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் இஸ்ரேல் நாடு முழுவதும் தற்போது எச்சரிக்கை சைரன்கள் ஒலித்து, பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு ஆதரவாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களும் தற்போது களத்தில் குதித்துள்ளதால் செங்கடல் பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. “செங்கடலில் இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்துக்கு முழுமையான தடை விதிக்கிறோம்; இஸ்ரேலின் எந்தவொரு கப்பலும் எங்கள் ராணுவ இலக்காகவே கருதப்படும்” என்று ஹூதி அமைப்பினர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இஸ்ரேலின் முக்கிய இலக்குகளை நோக்கி அவர்கள் ஏவிய ஏவுகணைகளை இடைமறிக்க இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் மிகப்பாரிய மோதலாக இது பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நிச்சயம் கடுமையான பதிலடி கொடுக்கும் என்பதால், ஈரானுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் பல நாட்கள் நீடிக்கக்கூடும் எனத் தெரிகிறது. நிலைமையைச் சமாளிக்க இஸ்ரேல் தனது கூடுதல் ரிசர்வ் படைகளைத் திரட்டி வரும் வேளையில், இந்த மோதலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் கடல்வழி கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…