இதுதான் First Look-ஆ?… மீண்டும் தடையா?… ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வசமாகச் சிக்கிய தவெக அரசு… அதிமுகவின் பகீர் குற்றச்சாட்டு…!!

By Gayathri on ஆவணி 29, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை விவாதத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விமர்சிக்கும் வகையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ கருப்பையா பேசியிருப்பது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரைத் தன் தொகுதியில் கொண்ட ஒருவரே, சங்க காலத் தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதலை இழிவுபடுத்திப் பேசியிருப்பதை அதிமுக வன்மையாகக் கண்டித்துள்ளது. தமிழர்களுக்கும் காளைகளுக்குமான ஆழமான உறவு மற்றும் பாரம்பரியம் குறித்து அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வுக்கு அடிப்படைப் புரிதல் கூட இல்லையா என அக்கட்சி சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த காலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து போராடியதன் மூலம், அப்போதைய அதிமுக அரசால் மத்திய அரசிடம் போராடிப் பெறப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு உரிமையைக் கொச்சைப்படுத்தும் இந்தப் பேச்சு ஏன் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படவில்லை என்றும் அதிமுக சாடியுள்ளது. மீண்டும் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கும் உள்நோக்கத்தோடு, அதற்கான முன்னோட்டமாகவே தற்போதைய அரசு தனது எம்.எல்.ஏ-வை இவ்வாறு பேச வைத்துள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுவதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உடனடியாக மன்னிப்புக் கேட்பதுடன், ஜல்லிக்கட்டுத் தொடர்பான அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைச் சட்டமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.