NDA கூட்டணியிலிருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக விலகுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதற்கான உண்மையான காரணங்கள் குறித்து விவாதிக்க, அக்கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தாம் யார் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை என்றும், கட்சியின் தேர்தல் தோல்வியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்த அவர், கட்சியின் எதிர்கால நலன் கருதியே இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
