தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கும் சூழலில், அதிமுகவில் நாளுக்கு நாள் பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
நேற்று செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பு இருந்த நிலையில் தற்போது அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக இபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
