“போட்டோ வச்சா உங்க திட்டம் ஆயிடுமா?”.. முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய அதிமுக.. கோட்டையை உலுக்கும் பரபரப்பு அறிக்கை..!!

Spread the love

அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களின் பசியாற்றி வரும் “அம்மா உணவகங்களில்” இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு வருவதற்குப் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை அகற்றிவிட்டு, தற்போதைய முதலமைச்சரின் புகைப்படத்தை அங்கே வைத்திருப்பது தற்போதைய பொய்க்கால் குதிரை அரசின் மிக மோசமான செயல் என அந்த அறிக்கையில் கடுமையாகச் சாடப்பட்டுள்ளது.

“அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்களின் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் முதலில் தோன்றுவது ஜெயலலிதாவின் முகம் மட்டும்தான் என்று அதிமுக சுட்டிக்காட்டியுள்ளது. அப்படி வரலாற்றில் தனக்கென முத்திரை பதித்து கம்பீரமாக நிற்கும் அம்மா உணவகங்களில் உள்ள அவரது புகைப்படங்களை நீக்கிவிட்டு, தற்போதைய முதல்வர் தனது புகைப்படத்தை அங்கே மாட்டி வைப்பதன் மூலம், இது ஏதோ தனது சொந்தத் திட்டம் என்று மக்களை நம்ப வைத்துவிட முடியாது என்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தங்களது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

எல்லாவற்றையும் வெறும் இன்ஸ்டாகிராம் ‘பேரலல் யுனிவர்ஸ்’ (Parallel Universe) பிம்பங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றிவிட முடியாது என்பதை இன்றைய முதலமைச்சர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் என அதிமுக எச்சரித்துள்ளது. எனவே, உடனடியாகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஏற்கனவே இருந்தபடி ஜெயலலிதாவின் புகைப்படங்களை மீண்டும் நிறுவ வேண்டும் என்றும், அதை விடுத்து அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெறும் வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதோடு நிறுத்தாமல், அவற்றைச் செயல்படுத்துவதில் இந்த அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Muthu Mani

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

7 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

7 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

8 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

9 மணத்தியாலங்கள் ago