சமீபத்திய தேர்தல் தோல்வியால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள அதிமுகவில் இருந்து, முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருவது அக்கட்சியை மேலும் பலவீனப்படுத்தி வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவிற்குப் பலத்த அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு முக்கிய சேர்க்கை இன்று நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட அரிமளம் ஒன்றியக் குழு துணைத் தலைவரும், அதிமுகவின் தீவிர முகமாக இருந்த அரிமளம் ஒன்றிய செயலாளருமான கடையக்குடி எஸ். திலகர், அதிமுகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
அதிமுகவிலிருந்து வெளியேறிய கடையக்குடி எஸ். திலகர், இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் முன்னிலையில் தனது ஆதரவாளர்கள் பெருந்திரளானோருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை இணைத்துக் கொண்டார். தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பங்கள் காரணமாகவே நிர்வாகிகள் தவெக நோக்கி நகர்வதாகக் கூறப்படும் நிலையில், புதுக்கோட்டையின் இந்த முக்கிய அரசியல் மாற்றம் மாவட்டத்தில் அதிமுகவினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியில், 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது சிறுவனைப்…
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…