தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வர மறுபக்கம் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் நடத்தி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு இந்த தேர்தலில் அதனை எதிர்க்கட்சியாக கூட வரவிடாது என்ற கருத்து தான் தற்போது நிலவுகிறது. அதிமுகவிலிருந்து இபிஎஸ் மூலம் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் மற்றும் சசிகலா ஆகியோர் நால்வர் அணியாக உருவெடுத்து உள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருக்கிறது. இதற்கு இபிஎஸ் ஒத்து வராததால் பிரிந்தவர்களை சேர்க்க வேண்டும் என்ற பழைய பிளானுக்கு பதிலாக தற்போது பாஜக புதிய ஸ்கெட்ச் ஒன்றை போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பாஜகவுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளில் சிலவற்றை பிரிந்திருப்பவர்களுக்கு வழங்கலாம் என்று திட்டம் இருக்கிறதாம். இதனாலையே அதிமுகவிடம் பாஜக 50 சீட்டுகளை கேட்கிறது என்றும் கூறுகின்றனர்.
