“அதிமுக-வில் சீட் வேணுமா?… அப்போ சொத்தை வித்து ரூ.10 கோடி கொண்டு வா”…. தேர்தல் சீட் மோசடி புகாரில் சிக்கிய சி.விஜயபாஸ்கர்?…. அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 1, 2026

Spread the love

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் தருவதாகக் கூறி, தலா ரூ.10 கோடி வீதம் பண வசூலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது அதிமுக நிர்வாகிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பழனிவேல் இது குறித்துப் பேசுகையில், “நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது, எனது சொத்துக்களை விற்றுப் பணம் கொண்டு வருமாறு விஜயபாஸ்கர் நிபந்தனை விதித்தார்.

அதேபோல ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த விமல் என்பவரும் சீட் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டுள்ளார்” எனத் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். தற்போது விஜயபாஸ்கர் அ.தி.மு.க-விலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள சூழலில், அவர் மீதான இந்த அடுக்கடுக்கான ஊழல் மற்றும் பணமோசடி புகார்கள் அரசியல் வட்டாரத்தில் கடும் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளன.