திமுகவுக்கு ஓட்டு போட்ட அதிமுக கவுன்சிலர்கள்… யார் அந்த 6 கருப்பு ஆடுகள்?… செம கடுப்பில் இபிஎஸ்…!

By Nanthini on ஆவணி 19, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகிறது. அதே சமயம் பாஜக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்று கூறிக்கொண்டு இருக்க அதிமுக மற்றும் பாஜக இடையே சற்று மோதல் போக்கு நிலவி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதால் திமுகவிற்கு தாவி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து சிலர் திமுகவுக்கு படையெடுத்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க சங்கரன்கோயில் நகராட்சி சேர்மேனுக்கான மறைமுக தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் ஆறு பேர் திமுகவுக்கு ஓட்டு போட்டது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடுப்பில் உள்ள அதிமுக தலைமை அந்த ஆறு கருப்பு ஆடுகளை கண்டறிய உத்தரவிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் அதிமுக வாக்கு வங்கியை உடைக்க திமுக என்று வருவது கவனிக்கத்தக்கது.