BREAKING: சற்றுமுன் விலகினார்.. CM விஜய் தொகுதியில் பரபரப்பு…. ஆடிப்போன அரசியல் களம்….!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக, சமீபத்தில் நடந்து முடிந்த 2026 பேரவை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜசேகரன், அக்கட்சியிலிருந்து முற்றிலும் விலகியுள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளராகவும் நீடித்து வந்த அவர், தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த அதே திருச்சி கிழக்கு தொகுதியில், அவரை எதிர்த்து மிக முக்கிய வேட்பாளராகக் களம் கண்ட ராஜசேகரனின் இந்த திடீர் விலகல் முடிவு, திருச்சி மாவட்ட அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தற்போதைய அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியமான விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.