AI-ஐ தவறான செயலுக்கு பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இது கவலைக்குரிய ஒரு விஷயமாக மாறியுள்ளது. உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர்நகரில் ராமர் மற்றும் இந்திய அரசியலமைப்பின் முதன்மைச் சிற்பி டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் ஆகியோரைக் கொண்ட ஆட்சேபனைக்குரிய AI-உருவாக்கப்பட்ட வீடியோ , அப்பகுதி முழுவதும் பதற்றத்தைத் தூண்டியுள்ளது.
अम्बेडकरनगर : सोशल मीडिया में भगवान पर आपत्तिजनक पोस्ट
➡ पुलिस ने आरोपी पर मुकदमा दर्ज किया
➡ भाजपा मंडल उपाध्यक्ष कमलेश ने केस दर्ज कराया
➡ विजय कुमार पर कई धाराओं में केस दर्ज
➡ महरुआ थाना क्षेत्र के सेहरा जलालपुर का निवासी#AmbedkarNagar #OffensivePost #PoliceAction… pic.twitter.com/u417jtjh96— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) October 13, 2025
ஜலால்பூர், செஹ்ராவைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் உருவாக்கி ஆன்லைனில் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ, பாஜக ஆதரவாளர்கள் மற்றும் ராம பக்தர்களிடையே பரவலான சீற்றத்தைத் தூண்டியுள்ளது. பல கிராமவாசிகளும் பாஜக தொண்டர்களும் இந்த காணொளியை மிகவும் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இது ராம பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து பாஜக மண்டல துணைத் தலைவர் கமலேஷ் சிங் அளித்த புகாரின் பேரில், போலீசார் விஜய் குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
