ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பெண்களின் நடிப்புத் திறமையை வெளிக்கொணரும் வகையில் உருவாக்கப்பட்ட ‘மகா நடிகை சீசன் 2’ நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. ஏற்கனவே இதன் முதல் சீசன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது தொடங்கியுள்ள இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் மேலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் இனிவரும் வாரங்களில், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த புதிய சீசனின் சிறப்பம்சமாக தமிழ் திரையுலகின் மூன்று முக்கிய பிரபலங்கள் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர். தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் சேரன், பல்லாண்டுகால அனுபவம் மிக்க முன்னணி நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சமீபத்தில் வெளியாகிப் புகழ்பெற்ற ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகை ஸ்வாதிகா ஆகியோர் இந்த நிகழ்ச்சியை நடுவர்களாக இருந்து வழிநடத்தவுள்ளனர்.
https://www.instagram.com/reel/DYtcRWtk5Jg/?utm_source=ig_web_copy_link
நிகழ்ச்சியின் அறிமுக விழாவிலேயே, போட்டியாளராகப் பங்கேற்ற பெண்ணொருவர் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தினார். பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கிய இந்த உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ஒட்டுமொத்த ரசிகர்களின் பலத்த பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…