தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்னும் நிறுவனத்தை தொடங்கி பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். இது வெறும் 160 மாணவர்களுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பின்தங்கிய சமுதாயத்தில் உள்ள மாணவர்களுக்கு, கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. இதன் அலுவலகம் திறப்பு விழா, சென்னையில் நடைபெற்ற பொழுது மாணவர்கள் “கல்வியே எங்கள் ஆயுதம்” என உறுதிமொழி ஏற்றனர்.
Heart is full seeing this. When the mom said Dr.Nandakumar , look at his reaction. For many Tamil youngsters and families, becoming Doctor is a dream profession pic.twitter.com/kxceGy68NM
— Rajasekar (@sekartweets) August 10, 2025
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், நடிகர் சூர்யா செய்த உதவியால், வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அகரம் பவுண்டேஷனின் 15 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் பட்ட கஷ்டங்கள், அவர்களுக்கு கிடைத்த பலன்கள், அவர்கள் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் மாணவர்கள் கண்ணீருடன் பகிர்ந்துள்ளனர். இதில் 10 வருடங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில், வீட்டில் மின்சாரம் இல்லாத குவாரி தொழிலாளர்களின் மகன் நந்தகுமார் ஒரு மருத்துவராக வேண்டும் என்று கனவு இருப்பதாக பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் அவர் டாக்டர் நந்தகுமாராக அதே மேடையில் திரும்பியுள்ளார். இந்த நெகிழ்ச்சி தருணம் அனைவரையும் மகிழ்விக்க வைத்துள்ளது.
