தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அதிமுக, தற்போது கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருகிறது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருவது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஒரு பெரிய பட்டாளமே தவெக-வில் ஐக்கியமாகியுள்ள நிலையில், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் போன்ற முக்கிய தூண்களும் அதிமுகவிலிருந்து விலகக்கூடும் என்ற தகவல் கட்சியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கட்சியின் இந்த தொடர் சரிவுக்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீதான அதிருப்தியே முதன்மைக் காரணம் என்று கீழ்மட்ட தொண்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திமுகவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்தது மற்றும் தேர்தல் வியூகங்களில் கோட்டை விட்டது போன்ற காரணங்களால், ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்து அதிமுக தற்போது போட்டியிலேயே இல்லாத ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக பக்கம் தாவியிருப்பது எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவத்திற்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் கட்சியின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் தற்போது தொண்டர்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சியை விட்டு விலகத் தயாராக இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களையும், மாவட்ட நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து சமாதானப்படுத்த வேண்டும் என்று தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இக்கோரிக்கைகளுக்கு அவர் இதுவரை முறையான செவிசாய்க்கவில்லை என்றே கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி உடனடியாக அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி, கட்சியை மறுகட்டமைப்பு செய்யத் தவறினால், தமிழகத்தின் பாரம்பரியமிக்க ‘திமுக – அதிமுக’ என்ற இருமுனைப் போட்டி என்பது மாறி, அது நிரந்தரமாக ‘திமுக – தவெக’ என்ற நிலைக்குச் சென்றுவிடும் என்று அரசியல் விமர்சகர்களும் கீழ்மட்ட நிர்வாகிகளும் மிகுந்த வேதனையுடன் எச்சரிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…