#image_title
விஜய் டிவி புதுப்புது நிகழ்ச்சிகளுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் பெயர் போனது. அதுபோல விஜய் டிவியில் தொடர்களும் விறுவிறுப்பாகவே இருக்கும். தற்போது விஜய் டிவிக்கு டப் கொடுக்கும் விதமாக சன் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி நடத்தும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ்.
ஏழு சீசன்கள் முடிந்த பிறகு தற்போது பிக் பாஸ் எட்டாவது சீசன் 80 நாட்களைக் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. மிகவும் பரபரப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் 25 நாள்களில் பிக் பாஸ் முடிந்துவிடும். அதனால் பிக் பாஸ் முடிவை ஒட்டி வருடா வருடம் விஜய் டிவி புதுப்புது தொடர்களை இறக்குவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் ஓடாமல் இருக்கும் ஒரு சில தொடர்களையும் சுபம் போட்டு முடித்து விடுவார்கள். அவை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
பிக் பாஸ் முடிந்த உடனே புத்தம் புது சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. சிந்து பைரவி, அய்யனார் துணை, பூங்காற்று திரும்புமா மற்றும் தனம் போன்ற நான்கு புது சீரியல்களை விஜய் டிவி கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் மிகக் குறைந்த இடத்தில் இருக்கும் இரண்டு சீரியல்களையும் முடிப்பதாக முடிவெடுத்து இருக்கிறது.
முதலில் வீட்டுக்கு வீடு வாசப்படி என்று புது தொடர் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை என்பதால் அந்த தொடரை முடிக்க இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் நல்ல டிஆர்பி ரேட்டை பெற்று வந்தது. தற்போது அதில் கதை சரியில்லாமல் இழுத்தடிப்பதால் இந்த சீரியலையும் சுபம் போட்டு முடித்து விடலாம் என்று விஜய் டிவி முடிவு செய்து இருக்கிறார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…