தமிழக அரசியலில் அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி என்பது கொள்கை ரீதியானதாக இல்லாமல் ஒரு நிர்பந்தத்தின் அடிப்படையில் உருவான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை பாஜகவுடன் இனி எந்த தேர்தலிலும் கூட்டணி கிடையாது என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி அடுத்த இரண்டு மாதங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது பியூஸ் கோயல் போன்ற மத்திய தலைவர்கள் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் தொகுதி பங்கேட்டில் நிலவும் இழுப்பறி இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஊடகங்களில் கசிந்த தொகுதி பங்கீடு விவகாரங்கள் தொடர்பாக அதிமுக தலைமை இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மௌனம் காப்பதன் மூலமாக அந்த தகவல்கள் உண்மைதான் என்பதை சூசகமாக உணர்த்துகிறது. இது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளான அதிமுக, ஓபிஎஸ் அணி மற்றும் பாஜகவுக்கு விடுபட்ட ஒரு மறைமுக எச்சரிக்கையாக தான் பார்க்கப்படுகின்றது.
அதாவது அதிமுகவின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் ஒதுக்கும் இடங்களை மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் வியூகமாக உள்ளது. இந்த அதிகாரப் போட்டி மற்றும் வெளிப்படைத்தன்மை ஏற்ற சூழல் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இந்த கூட்டணி ஒருமித்த கருத்துடன் களமிறங்குமா என்ற சந்தேகத்தை தற்போது எழுப்புவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றன.
