நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், மார்க் ஆண்டனி திரைப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் கடந்த வெள்ளிக்கிழமையன்று திருமணம் நடந்தது. இது பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கு 2வது திருமணம்தான். இவர் ஏற்கனவே, பிரபுவின் சகோதரி மகன் குணால் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருமணமான சில ஆண்டுகளில் சொத்து குறித்த பிரச்னையில் தேன்மொழிக்கும் பிரபுவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. அந்த பிரச்னை குணால், ஐஸ்வர்யா மண வாழ்க்கையிலும் விரிசலை உண்டுபண்ணியதால் இருவரும் பிரிந்து விட்டனர். விவாகரத்தும் முறைப்படி பெற்றுக்கொண்டனர்.
கணவரை பிரிந்த ஐஸ்வர்யா, சென்னையில் கேக் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை பெரிய அளவில் நடத்தி வந்தார். இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. பிறகு இரண்டு தரப்பிலும் பெற்றோர்கள் இதுகுறித்து பேசி, திருமணம் செய்ய முடிவானது. நேற்று முன்பு நடந்த இந்த திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், லெஜண்ட் சரவணன், விஷால் உள்ளிட்ட பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, மறுமணம் என்பது தவறான ஒன்றல்ல. ஏற்றுக்கொள்ள கூடியதுதான். தன் மகளுக்கு எதிர்காலத்தில் ஒரு ஆண் துணை பாதுகாப்பு வேண்டும் என்ற நிலையில், பிரபு தனது மகள் திருமணத்தை நடத்தி வைத்தார். ஆனால் ஐஸ்வர்யா வயது 41 என்ற நிலையில், தன்னைவிட 9 வயது குறைவான 32 வயதான ஆதிக் ரவிச்சந்திரனை மறுமணம் செய்திருக்கிறார். வயது ஒரு பொருட்டல்ல.
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷை விட 5 வயது மூத்தவர் என்றாலும், அவர்களும் திருமண வாழ்வில் சந்தோஷமாக தானே வாழ்ந்தனர் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர்களை பற்றிய இணையவழி தகவல்களில் பிரபு மகள் ஐஸ்வர்யா பிறந்த நாள் 10.06.1988 எனவும், ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்த 17.10.1989 எனவும் உள்ளது. இதன்படி பார்த்தால் ஐஸ்வர்யா வயது 35 எனவும், ஆதிக் ரவிச்சந்திரன் வயது 34 என்றும் வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.