பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6ம் தேதியான இன்று இந்தியா முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய கோவில்கள் வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. கூடுதலான எண்ணிக்கையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் இன்று போலீசார் அதிக உஷார் நிலையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்கள் பஸ் ஸ்டாண்டுகள் ரயில்வே ஸ்டேஷன்கள் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
