#image_title
தமிழ் சினிமாவில் கதாநாயக, கதாநாயகிகளுக்கு என்று ஒரு ரசிகப் பெரும்கூட்டம் இருப்பது கவர்ச்சி நடிகைகளுக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. அவர் தான் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி வேடங்களையே தேடி தேடி நடித்தார் என்றாலும், அவரிடம் ஒரு தனித்துவம் இருந்தது. இதனால் தென்னிந்தியா முழுவதும் அவருக்கு படங்களுக்கு வரவேற்பு இருந்தது.
ஆனாலும் அவர் தன்னுடைய 35 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்றுவரையும் அவரின் மரணத்துக்கான காரணம் மிகவும் மர்மமாகவே உள்ளது. அப்படி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் வாழ்க்கையை தழுவி தி டர்ட்டி பிக்சர் எனும் திரைப்படம் இந்தியில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.
இந்நிலையில் கோழி கூவுது என்ற படத்தில் சில்க் ஸ்மிதா கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் பிரபு கதாநாயகனாக நடிக்க கங்கை அமரன் இயக்கினார். அந்த படத்தில் அறிமுகமான மற்றொரு நடிகைக்கு சில்க் ஸ்மிதாவின் ஒரிஜினல் பெயரான விஜயலட்சுமி என்பதை சுருக்கி விஜி என்று பெயர் வைத்துள்ளார் கங்கை அமரன்.
அவரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் 1990 களில் அப்போல்லோ மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் அவருக்கு அந்த சிகிச்சையால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் மருத்துவமனையின் மீது இழப்பீடு வழக்கு போட்டு வென்றார். மற்றொரு அறுவை சிகிச்சையில் அவருக்கு உடல்நலம் சீரான நிலையில் 2000 ஆம் ஆண்டு அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலைக்குக் காரணம் இயக்குனர் ஏ ஆர் ரமேஷோடு அவருக்கு இருந்த காதல்தான் என்று தற்கொலை கடிதத்தில் எழுதியிருந்தார். இயக்குனர் ரமேஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபியின் மாமியாரான கமலா காவல் நிலையத்திற்கு சென்று என்னையும் என் பொன்னையும் கொலை பண்ண பார்க்கிறாங்க…
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நாயகன் நடிகர் ஆஷிஷ் தனது காதலியை அறிமுகம் செய்திருக்கின்றார். விஜய்…
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜூ தற்போது புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஒரு…
நடிகை அதிதி ராவ் விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்த நிலையில் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.…
நடிகை நிவேதா பெத்துராஜ் தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ்…
நடிகை அமலாபால் தங்களிடம் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டதாக பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ்…