#image_title
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று அதிர்ச்சியுடன் கேட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் வித்யா பிரதீப். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் நடிப்பு மீதி இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார். ஆரம்பத்தில் விளம்பர திரைப்படங்களின் நடித்து வந்த இவர் அதன் பிறகு அவள் பெயர் தமிழரசி, விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2, மாரி 2, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகின்றார். என்னதான் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் மற்றொரு பக்கம் விஞ்ஞானியாகவும் கலக்கி இருக்கின்றார்.
இது பலருக்கும் தெரியாது, அதாவது இவர் பயோ டெக்னாலஜியில் முதுகலை அறிவியல் பட்டத்தை முடித்து இருக்கின்றார். பின்னர் சென்னையில் உள்ள கண் மருத்துவமனையில் ஸ்டம்ப் செல்கள் பற்றி ஆராய்ச்சியில் படித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றார். தற்போது அமெரிக்காவில் விஞ்ஞானியாகவும் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலாகி இருந்த இவர் அவ்வபோது படங்களிலும் நடித்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆனதே பலருக்கும் தெரியாத ஒன்று. இவருடைய கணவர் குறித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது இவர் 13 வருடங்களுக்கு முன்பே மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இவர்கள் கணவர் அமெரிக்காவில் போட்டோகிராபராக பணியாற்றி வருகின்றார். தற்போது இவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த பலரும் உங்களுக்கு திருமணமாகி விட்டதா? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…