தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாகவும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கியவர் தான் விசித்ரா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினியாக நடிக்க வந்து இந்த வேடம்தான் கிடைத்தது என பல இடங்களில் அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். போர் கொடி திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் விசித்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியது பலரையும் கலங்க வைத்துள்ளது.
அதில், 90களில் நடித்துக் கொண்டிருந்தபோது எனக்கு திருமணம் நடக்குமா? நல்ல கணவர் கிடைப்பாரா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். சில நேரத்தில் திருமணமே வேண்டாம் சிங்கிளாகவே இருந்து விடலாம் என்று கூட நான் முடிவெடுத்துள்ளேன். அப்போது ஷாஜி திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். நான் மிகவும் யோசித்தேன். பிறகுதான் அவரை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை சவாலாக மாறியது. எனக்கு திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகள் உள்ளனர். என் கணவர் என்னிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்றும் கேட்ட பின்பும் பலமுறை இது குறித்து யோசித்தேன். திருமணத்திற்கு பின் வாழ்க்கை மிகவும் சவாலானதாக மாறியது. நான் இத்தனை வருடங்கள் கடந்து வந்த என் திருமண வாழ்க்கை குறித்து யோசிக்கும் போது மிகவும் எமோஷ்னலாக உள்ளது என்று விசித்ரா அந்த பேட்டியில் கண்கலங்கி பேசியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…