நான் காதலுக்கு எதிரி இல்ல…! ஸ்ரீதேவி ஒரு பிராடு…! தங்கை பற்றிய உண்மைகளை உடைத்த நடிகை வனிதா விஜயகுமார்…!

By Begam

Published on:

தமிழ் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் விஜயகுமார். இவர் அதிக அளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இவருக்கு முத்துகண்ணு மற்றும் மஞ்சுளா இன்று இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி முத்து கண்னுக்கு அனிதா, கவிதா, அருண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி மூன்று மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

   

அருண் விஜய் ஹீரோவாக நடித்து  சமீபத்தில் ‘யானை’ திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த  வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேருமே ஹீரோயின்களாக நடித்தவர்கள். ஆனால் இவர்களில் வனிதா மட்டுமே தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார். தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதா விஜயகுமார் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்.

நடிகை வனிதா தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார்.  திருமணம் ஆன சில வருடங்களிலேயே முதல் கணவர் ஆகாஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த வனிதா, அதே ஆண்டு ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இரண்டாவது கணவரிடம் இருந்தும், விவாகரத்து பெற்றார். இவர் தற்போது தனது மகள்கள் ஜோவிகா மற்றும் ஜெயனித்தா ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்ட வனிதாவுக்கு அந்த வாழ்க்கையும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்தது.

தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வரும் வனிதா சமீபத்தில் அளித்த  பேட்டி ஒன்றில் நடிகை  ஸ்ரீதேவி குறித்த சில உண்மைகளை கூறியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது , ‘நான் காதல் திருமணத்திற்கு எதிரி அல்ல.  என்றும்  என் தங்கை ஸ்ரீதேவி மிகவும் கோபக்காரி. கோபம் வந்தால், ரூமுக்குள் சென்று கதவை பூட்டி தாப்பா போட்டுக் கொள்வார். கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் போட்டு உடைப்பா. சின்ன வயசுல இருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு, நல்ல ட்ராமா பண்ணி எல்லாரையும் ஏமாத்திடுவா. அதனாலேயே ஸ்ரீதேவியை மட்டும் யாருமே அடிக்க மாட்டாங்க’ என கூறியுள்ளார்.