#image_title
தமிழ் சினிமாவில் சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வடிவுக்கரசி. படித்துக் கொண்டிருந்த போதே வீட்டுக்குத் தெரியாமல் அந்த படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். ஆனால் அவரின் வித்தியாசமான மிடுக்கான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அதன் பின்னர் பல படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போது வரை அசத்தி வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவ்வாறு தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். வடிவுக்கரசி எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்தன. சிவப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை மற்றும் கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் அவரின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
#image_title
அதேபோல வில்லி கதாபாத்திரத்தில் மட்டும்தான் அவர் சிறப்பான நடிப்பைக் கொடுப்பார் என்றில்லாமல் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கலக்குவார். ஒரு கட்டத்தில் சினிமாவில் அவருக்குப் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத போது சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். அங்கும் அவருக்கு கொடூர வில்லி கதாபாத்திரமேக் கொடுக்கப்பட்டது. சினிமாவில் தூள் கிளப்பியவர் சீரியலை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அவர் தமிழ் சினிமாவில் நுழைந்து 45 ஆண்டுகளைக் கடந்துள்ளதை அவரின் சக நடிகர்கள் ஒரு விழாவாக எடுத்துக் கொண்டாடியுள்ளனர். அதில் கார்த்தி, நாசர், எடிட்டர் லெனின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு அவரைப் பாராட்டியுள்ளனர்.
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…
சம்பவத்தின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அகர்வால் எரிபொருள் நிலையத்திற்கு வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ…
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…