கேடி, வியாபாரி, கல்லூரி, அயன், சிறுத்தை போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை தமன்னா. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தற்போது பாலிவுட்டிலும் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார். நடிப்பைத் தாண்டி சொந்தமாக பிசினஸிலும் ஈடுபட்டு வரும் தமன்னா, அண்மையில் நேர்காணல் ஒன்றில் திரைப்படங்களில் இடம்பெறும் சிறப்புப் பாடல்கள் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
திரைப்படங்களில் வரும் இத்தகைய சிறப்புப் பாடல்களை ‘ஐட்டம் சாங்’ என்று அழைப்பது எனக்கு முற்றிலும் உடன்பாடற்ற ஒன்று என்று தமன்னா தெரிவித்துள்ளார். “அந்தச் சொல் பெண்களுக்கு மரியாதைக்குரியது அல்ல. ஒரு பாடலின் பிரம்மாண்டத்திற்காகவும், அதன் வெற்றிக்காகவும் நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அதை உருவாக்குபவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் தெரியும். அப்படிப்பட்ட உழைப்பை வெறும் ‘ஐட்டம்’ என்ற ஒற்றைச் சொல்லால் சுருக்குவது, அந்தப் பெண்ணின் உழைப்புக்கு நாம் அளிக்கும் மரியாதை அல்ல; சமூகத்தின் இந்த அணுகுமுறையில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும்” என்று அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
மேலும், நடிகைகளை வெறும் கவர்ச்சிப் பொருளாக மட்டும் பார்க்காமல், அவர்களின் அசாத்திய நடிப்புத் திறமைக்கும் உழைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, தான் பேசிய கருத்துக்களைச் சிலர் தவறான கோணத்தில் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகக் குறிப்பிட்ட தமன்னா, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் விரிவான விளக்கம் ஒன்றை அளித்து வதந்திகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…
பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…