21 வயசுல கல்யாணம்.. Divorce ஆனது ஏன்? தனிமைல இருந்து மீள 8 வருஷம் ஆச்சு’.. பல விஷியங்களை பகிர்ந்த ஸ்வர்ணமால்யா…

By Begam

Updated on:

சன் டிவியில் ஒளிபரப்பான ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சி மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை ஸ்வர்ணமால்யா.  இதை தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சிளில் தொகுப்பாளராகவும் பயணித்தார். இவர் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தது மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தில் தான். இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகை ஷாலினியின் அக்காவாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து அண்ணா, மொழி போன்ற படங்களில் இரண்டாம் கட்ட ஹீரோயின் ஆக நடித்தார்.

   

2002ல் அர்ஜுன் ராமராஜன் என்று அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். 2004ல் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் விழுந்த தெக்கித்தி பொண்ணு, சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.

இவர் சென்னையில் தற்பொழுது ஒரு  பரதநாட்டிய பள்ளி ஆரம்பித்து பல குழந்தைகளுக்கு பரதம் கற்றுத் தந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ’21 வயதில் எனக்கு திருமணம் நடந்து விவாகரத்தும் ஆகிவிட்டது. பிரிந்ததற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. விவாகரத்து பிறகு என்னை விட எனது பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

நானும் கஷ்டப்படக்கூடாது என்று என்னை படிக்க சொன்னார்கள். அதன்பிறகு நான் ஒரு பெரிய பிரேக் அப் சண்டையில் ஈடுபட்ட போது மன அழுத்தத்தில் இருந்தேன், தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் தோன்றியது. பின் இது என்னவாழ்க்கை என தோன்றும் போது எனது தங்கை என்னை மருத்துவரிடம் அழைத்து சென்றார். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்’ என மனவருத்தத்துடன் பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த பேட்டியானது ரசிகர்களையும் சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது.