மாஸ்க் அணிந்தபடி கும்ப மேளாவில் புனித நீராடிய விக்ரம் பட நடிகை… வைரலாகும் புகைப்படம்..!

By Soundarya on மாசி 5, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சூப்பரா நேஷனல் போட்டியில் மகுடம் சூடியவர். முன்னதாக மிஸ் சுப்ரநேஷனல் பட்டம் வென்ற பிறகு, ஸ்ரீநிதி ஷெட்டிக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்த வகையில் கேஜிஎப் படத்தில் யாஷுடன் இணைந்து அறிமுகமானார் நடிகை ஸ்ரீநிதி.

   

நடிகை ஸ்ரீநிதி, முதல் பாகத்தின் தொடர்ச்சியான கேஜிஎப்-2 ல் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருந்தார்.  இயற்கையான ரோஸ் மற்றும் கற்றாழை சார்ந்த அழகுப் பொருட்களை வைத்து தனது சருமத்தின் ஈரப்பசையை தக்க வைத்து வரும் நடிகை இவர்தான்.

   

 

கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து அசத்தியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த இவர், தற்போது பல படங்களில் நடித்த கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அண்மையில் விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்திலும் நடித்த அசத்தி இருந்தார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் நடக்கும் கும்ப மேளாவில் கலந்து கொண்டு புனித நீராடியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.