கல்யாணமாகி 15 வருஷம் ஆச்சு… இப்போ போயி காதல் மனைவி குறித்து இப்படி சொல்லிட்டாரே கிரிஷ்..!

By Soundarya on மாசி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல்களால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டவர் தான் பாடகர் கிரிஷ். வங்கி ஊழியரான இவரது தந்தைக்கு அமெரிக்காவில் பணியிட மாறுதல் கிடைத்த நிலையில் இவரின் குடும்பம் அமெரிக்காவிற்கு சென்றது. ஏறத்தாழ பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கு தொடர்ந்த இவர் அங்கு சினிமாவில் நடிப்பதற்கான படிப்பை படித்து முடித்தார். பிறகு சென்னை திரும்பிய கிரிஷ் இசையமைப்பாளர் கணேஷ் குமாரின் ஆல்பத்திலும் மேடைகளிலும் பாடிக் கொண்டிருந்தார்.

   

இதனைத் தொடர்ந்து கணேஷ்குமார் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இவரது குரல் வளத்தை பற்றி சொல்ல அதன் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது முன்னணி பாடகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 26 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வரும் மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளது பளிச்சிடும் விளக்குகள் பகல் போல காட்டுதே என்ற பாடலில் ஹரிஹரனுடன் சேர்ந்து பாடி தன்னுடைய முதல் பட வாய்ப்பு பெற்றார்.

   

 

அடுத்து 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் இன்றும் பலருக்கு பிடித்த உன்னாலே உன்னாலே பாடலை பாடியிருப்பார். இப்படி பிரபலமானார்.  சங்கீதாவை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சங்கீதா முழுக்க முழுக்க நடிப்பு துறையில் இருப்பவர். கிரிஷ் பின்னாடி பாடகர். எப்படி இவர்களுக்குள் காதல் மலர்ந்தது என்பது பலருடைய கேள்வியாகவும் இருந்தது. அதுமட்டுமில்லாமல் சங்கீதா அவருடைய கணவரை விட வயதில் மூத்தவர் என்றும் பேசப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக பேட்டி கொடுத்த சங்கீதா இதை தெளிவுபடுத்தியிருந்தார் அவருடைய கணவர் க்ரிஷ் அவரைவிட ஒரு வயது பெரியவர் என்றும் சொல்லியிருந்தர் .

சமீபத்தில் இவர்களுடைய காதல் கதை குறித்து கூறியிருக்கிறார் கிரிஷ். அதாவது சங்கீதாவை பார்த்தவுடன் காதல் எல்லாம் வரவில்லையாம். ஒரு விருது விழாவில் சங்கீதா அவருக்கு விருது கொடுத்தாராம். அதன் பிறகு நடந்த பார்ட்டியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்களாம். சங்கீதா தான் இவருடைய நம்பரை நடிகை லட்சுமி ராயிடமிருந்து வாங்கி போன் செய்து பேசினாராம். 15 வருட காதல் திருமண வாழ்க்கைக்கு பிறகு கிருஷ் இதை பேட்டியில் அவங்க மேல எனக்கு லவ் இல்ல எல்லாம் முதல்ல வரலை என்று சொன்னது கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது.