#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் ஸ்ரீஜா தம்பதியினர். இந்த சீரியல் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2014-ஆம் ஆண்டு செந்திலும் ஸ்ரீஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 ஆண்டுகள் குழந்தை இல்லை. பின்னர் கடந்த 2023-ஆம் ஆண்டு ஸ்ரீஜாவுக்கு தேவ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் செந்தில் ஸ்ரீஜா தம்பதியினர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, தேவ் பிறப்பதற்கு முன்னதாக 2,3 முறை கரு உண்டாகி கலைந்து விட்டது. நாங்கள் இரண்டு பேருமே குழந்தையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பார்ப்பு நனவாகவில்லை. ஒரு நாள் மீண்டும் கர்மமாக இருக்கிறேன் என ஸ்ரீஜா கூறியபோது செந்தில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சரி கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம் என்று கூறினார்.
நாங்கள் வாழ்க்கையில் பட்ட வேதனைகள் ஏராளம். மகிழ்ச்சியான செய்தியை முதலில் குடும்பத்திடம் சொல்லி குதூகலப்படுத்தி விடுவோம். அதன் பிறகு அவர்களிடம் அப்படி இல்லை என்று சொல்லும் போது அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டதை விட சுற்றி இருப்பவர்கள் வருத்தம் தான் மிகவும் அழுத்தத்தை உள்ளாக்கியது.
காதல் திருமண வாழ்க்கையில் நடக்கும் குழப்பங்கள் எங்களுக்கும் நடந்தது. காதல் திருமணமாக இருந்தாலும் வீட்டில் பார்த்து செய்து திருமணம் ஆக இருந்தாலும் முதல் மூன்று வருடங்களை எப்படியாவது கடந்து விட வேண்டும். கேமராவுக்காக வேண்டுமானால் பொய் பேசலாம். உண்மையில் எங்களுக்குள் அவ்வளவு சண்டை நடந்து இருக்கிறது. மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டோம். மகன் பிறந்து விட்டதால் இப்போது சண்டை போட நேரம் கிடைக்கவில்லை என ஸ்ரீஜா எமோஷனலாக பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…
ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலத்தில் மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செங்கரெட்டி…
மும்பை காந்திவலி கிழக்கு லோகண்ட்வாலா மகாடா வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 11:33 மணியளவில் விகாஸ் குட்டே…