Categories: சினிமா

2,3 தடவை கரு கலைஞ்சிருச்சு.. 8 வருடங்களுக்கு அப்புறம் தான் இவன் பிறந்தான்.. கஷ்டங்களை பகிர்ந்த நடிகை ஸ்ரீஜா..!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் ஸ்ரீஜா தம்பதியினர். இந்த சீரியல் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2014-ஆம் ஆண்டு செந்திலும் ஸ்ரீஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 ஆண்டுகள் குழந்தை இல்லை. பின்னர் கடந்த 2023-ஆம் ஆண்டு ஸ்ரீஜாவுக்கு தேவ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் செந்தில் ஸ்ரீஜா தம்பதியினர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, தேவ் பிறப்பதற்கு முன்னதாக 2,3  முறை கரு உண்டாகி கலைந்து விட்டது. நாங்கள் இரண்டு பேருமே குழந்தையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பார்ப்பு நனவாகவில்லை. ஒரு நாள் மீண்டும் கர்மமாக இருக்கிறேன் என ஸ்ரீஜா கூறியபோது செந்தில் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சரி கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம் என்று கூறினார்.

நாங்கள் வாழ்க்கையில் பட்ட வேதனைகள் ஏராளம். மகிழ்ச்சியான செய்தியை முதலில் குடும்பத்திடம் சொல்லி குதூகலப்படுத்தி விடுவோம். அதன் பிறகு அவர்களிடம் அப்படி இல்லை என்று சொல்லும் போது அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள். குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டதை விட சுற்றி இருப்பவர்கள் வருத்தம் தான் மிகவும் அழுத்தத்தை உள்ளாக்கியது.

காதல் திருமண வாழ்க்கையில் நடக்கும் குழப்பங்கள் எங்களுக்கும் நடந்தது. காதல் திருமணமாக இருந்தாலும் வீட்டில் பார்த்து செய்து திருமணம் ஆக இருந்தாலும் முதல் மூன்று வருடங்களை எப்படியாவது கடந்து விட வேண்டும். கேமராவுக்காக வேண்டுமானால் பொய் பேசலாம். உண்மையில் எங்களுக்குள் அவ்வளவு சண்டை நடந்து இருக்கிறது. மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டோம். மகன் பிறந்து விட்டதால் இப்போது சண்டை போட நேரம் கிடைக்கவில்லை என ஸ்ரீஜா எமோஷனலாக பேசியுள்ளார்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

1 மணத்தியாலம் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

1 மணத்தியாலம் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

4 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

4 மணத்தியாலங்கள் ago