சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ருதிராஜின் அம்மா இவர்தானா?… இத்தனை நாளா இது தெரியாம போச்சே…

By Begam

Published on:

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தென்றல்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சுருதி ராஜ். இத்தொடரில் அவர் நடித்த ‘துளசி’ என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவர் ஆஃபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

   

பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ‘அழகு’ சீரியலில் தனது குடும்பத்திற்காக போராடிவரும் ‘சுதா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றார். சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் தங்களது மார்க்கெட்டை இழக்காமல் இருக்க திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

அதேபோல நடிகை சுருதி ராஜும் 42 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் முதன்முதலில் வெள்ளித்திரையில் ‘அக்ரஜன்’ என்ற மலையாள படம் மூலம் அறிமுகம் ஆனார்.இதைத்தொடர்ந்து அவர் இளைய தளபதி விஜய் உடன் இணைந்து ‘மாண்புமிகு மாணவன்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் குறையவே சின்னத்திரை பக்கம் சென்ற இவர், தற்பொழுது 42 வயதைக் கடந்தும் திருமணம் செய்யாமல் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், தற்பொழுது தனது அம்மாவுடன் கிருஷ்ண ஜெயந்தி நாள் அன்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.