Categories: சினிமா

கவுண்டமணி கூட நடிக்க மாட்டேன்னு சொன்னதும்.. எல்லா படத்தில் இருந்தும் தூக்கிட்டாங்க.. அவரால தான் என் லைஃபே.. அதிர்ச்சி கிளப்பிய ஷர்மிலி..!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி மன்னனாக வலம் வந்தவர் கவுண்டமணி. தமிழ் சினிமாவையே தன் கட்டுக்குள் வைத்திருந்த கவுண்டமணி இப்போது வரை தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து தான் இருக்கின்றார். இப்படி பேரும் புகழுடன் இருந்து வந்த கவுண்டமணியை பற்றி யாரும் பெரிய அளவில் புகார் கூறியது கிடையாது. ஆனால் இவருடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை ஷர்மிலி கவுண்டமணி குறித்து பல சர்ச்சையான விஷயங்களை கூறியிருக்கின்றார்.

சமீபத்தில் நடிகை வனிதா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகை ஷர்மிலி. அந்த நேர்காணலில் நடிகர் கவுண்டமணி மீது பல புகார்களை அடுக்கி இருக்கின்றார். அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது: “குரூப் டான்சராக தனது சினிமா பயணத்தை தொடங்கினேன். சில காலம் கழித்து என்னால் நடனமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால் நடிக்க ஆரம்பித்தேன். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், எங்க வீட்டு வேலன் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் கவுண்டமணியுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. எனக்கு காமெடி எல்லாம் செட் ஆகாது. அது மட்டும் இல்லாமல் அவர் வயசு என்ன? என் வயசு என்ன? என சொல்லி அவருடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டேன்.

ஆனால் ஒரு படத்தில் கட்டாயப்படுத்தி என்னை அவருடன் நடிக்க வைத்து விட்டார்கள். அந்த படத்திற்கு பிறகு எங்கள் ஜோடி நல்ல ஒர்க் அவுட் ஆனதால் தொடர்ந்து கவுண்டமணியுடன் மட்டும் 27 திரைப்படங்களில் நடித்தேன். கவுண்டமணியுடன் நான் நடித்ததால் தான் பிரபலமானேன் என்று பலரும் கூறினார்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவருடன் சேர்ந்து நடித்ததால் மற்ற படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்தேன்.

வீரா படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அந்த தேதியில் கவுண்டமணி தேதி கொடுத்திருந்த காரணத்தினால் அதில் நடிக்கவிடாமல் செய்துவிட்டார். ஒரு கட்டத்தில் நான் வேறு சில படங்களில் நடிக்க வேண்டும் என்றால் கூட கவுண்டமணியிடம் கேட்டு தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதனால் பத்திரிக்கையில் பலரும் பலவிதமாக எழுத தொடங்கினார்கள்.

ஒருநாள் கவுண்டமனிடம் நேரடியாக சென்று இனிமேல் நான் உங்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். இதனால் கடுப்பான கவுண்டமணி அப்போது நான் புக் ஆகி இருந்த அனைத்து படங்களிலிருந்தும் என்னை தூக்கிவிட்டார். அவருடன் புக்கான படங்கள் மட்டுமில்லாமல் வேறு படங்களில் இருந்தும் என்னை தூக்கி எனது சினிமா வாழ்க்கையை கெடுத்துவிட்டார். என்று அந்த பேட்டியில் பேசியிருந்தார். மேலும் திருமணமே வேண்டாம் என்று இருந்த நான் 40 வயது வரை சிங்கிளாக இருந்தேன். தற்போது திருமணம் செய்து கொண்டு நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். என் கணவர் என்னை அன்பாக பார்த்துக் கொள்கிறார்” என்று பேசி இருந்தார்.

Mahalakshmi

Recent Posts

“கல்யாணம் வேணும்னா இதை செய்!”.. காதலி பெற்றோர் போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. காதலன் விபரீத முடிவு.. பதறவைக்கும் பின்னணி..!!

திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…

44 seconds ago

“எல்லாத்துக்கும் திமுக தான் காரணமா..?” அப்புறம் ஏன் நீங்க ஆட்சியில் இருக்கீங்க..? எதிர்க்கட்சிகளை அதிரவைத்த மேயர் பிரியாவின் அதிரடி கேள்வி..!!

"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…

2 minutes ago

விடுதி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய… வார்டன் செஞ்ச வேலை.. தட்டிக்கேட்டதால் சாதி ரீதியாக இழிவுபடுத்திய தாளாளர்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…

6 minutes ago

“அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…” நள்ளிரவில் வார்டன் கொடுத்த பாலியல் தொல்லை.. திண்டுக்கல் கல்லூரியில் மாணவிகள் கதறல்..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

12 minutes ago

ச்சீ இவனெல்லாம் மனுஷனா…? குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த .. தாய்க்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் அதிரடி கைது..!!

கடலூர் குழந்தைகள் நல மையத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு ஊழியர் சமயவேலு என்பவர்…

12 minutes ago

கில்லர் பட ஷூட்டிங்கில் விபத்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்தார் எஸ்.ஜே சூர்யா..!!

சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி படப்பிடிப்பு நள்ளிரவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது,…

16 minutes ago