#image_title
தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி என்ற துருவங்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த நேரத்தில் சைலண்ட்டாக இவர்கள் இருவருக்கும் இணையாக வெற்றி படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஜெமினி கணேசன். எம் ஜி ஆர் ஆக்ஷன் மற்றும் புராண படங்களில் நடித்தால், சிவாஜி கணேசன் எமோஷனலான குடும்பக் கதைகளில் நடித்து வந்தார். இவற்றுக்கிடையே ஜெமினி கணேசன் மென்மையானக் காதல் கதைகளில் நடித்தார். அதனால்தான் அவர் காதல் மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜெமினி கணேசன் ஈகோ பார்க்காமல் பிற நடிகர்களின் படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படி அவர் சிவாஜியோடு இணைந்து 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் எம் ஜி ஆரோடு ஒரே ஒரு படமான முகராசியில் மட்டுமே இணைந்து நடித்தார்.
#image_title
எம்ஜிஆர் மற்றும் ஜெமினி கணேசன் இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் சகோதரர்களாக நடித்திருப்பார்கள். 1966 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. தந்தையைக் கொன்றவரை கொல்ல வேண்டும் என நினைக்கும் கோபக்கார இளைஞராக ஜெமினியும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும் என எம் ஜி ஆரும் போராடுவார்கள்.
எமோஷனலான இந்த கதை நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. அதன்பின்னர் எம் ஜி ஆர் தன் படங்களில் ஜெமினி நடிக்க வேண்டும் எனவும் ஆசைப்படவில்லை.
இதற்கு எம் ஜி ஆருக்கு ஜெமினியின் மேல் இருந்த அக்கறைதான் காரணம் என சொல்லப்படுகிறது. நிறைய சிவாஜி கணேசன் படங்களில் செகண்ட் ஹீரோவாக அவர் நடிப்பதை பார்த்து “ஜெமினி தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர். அவர் ஏன் இப்படி செகண்ட் ஹீரோவாக நடித்து தன் மார்க்கெட்டை குறைத்துக் கொள்கிறார்” என தன் நண்பர்களிடம் வருத்தப்பட்டு கூறியுள்ளாராம்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…