எவ்ளோ பணம் கொடுத்தாலும் பிக்பாஸ்க்கு மட்டும் போக மாட்டேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்..!!!

By Divyamayakannan on ஆவணி 22, 2025

Spread the love

மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படங்களில் அறிமுகமாகியவர் தான் ஷாலின் ஜோயா. இப்போது பிரபல தொகுப்பாளனியாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்த திரை உலக பயணத்தில் பல சவால்களை கடந்து வந்துள்ளேன். எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும் என் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை மட்டும் செய்ய மாட்டேன் என்று நேர்காணல் ஒன்றில் ஷாலின் ஸோயா கூறியுள்ளார். மலையாளத்தில் சீரியல் ஒன்றில் நடித்துள்ளார், அந்த சீரியல் அவருக்கு நல்லப் பெயரை கொடுத்துள்ளது. நடிப்பு மட்டும் தொகுப்பு என இரு துறைகளிலும் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கிறார். கடந்த 24 ஆண்டுகளாக ஊடகத்துறையில் அவரது பயணம் தொடர்கிறது.

மலையாள திரை உலகில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தப் போது தமிழில் ‘ராஜா மந்திரி’ பட வாய்ப்பு வந்தது. எனக்கு தமிழ் தெரியாது இருந்தாலும், இது புது முயற்சியாக இருக்கும் என்று நடிக்க ஒப்புக்கொண்டேன். தொடர்ந்து ‘கண்ணகி’ என்ற படத்தில் சவாலான கதாபாத்திரம் ஒன்று கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தில்  நான் ஒன்றிணைந்து நடித்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு வந்த வாய்ப்புகள் ஏதும் எனக்கு பிடிக்காததால் தவித்து விட்டேன். கதாநாயகியாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.

   

குக் வித் கோமாளியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது . நானும் பங்கேற்க முடிவெடுத்தேன். தனிமையில் வேடிக்கையானவர் என்றாலும் பொதுவெளியில் அப்படி இல்லை என்று குறிப்பிட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு நல்ல பேரை கொடுத்துள்ளது. இப்பொழுது நடிகை சுஜிதா உடன் இணைந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வளம் வந்து கொண்டிருக்கிறார். ரீசன்டாக நேர்காணல் ஒன்றில் பணம் தேவை என்றாலும் அதற்காக பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று உறுதியுடன் ஷாலின் ஸோயா கூறியுள்ளார்.