#image_title
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். ஆனால் இந்த காதலுக்கு சீதாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால் இருவரும் சந்தித்துக் கொள்ளவே முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் அவரைக் கடத்திக்கொண்டு சென்றுதான் திருமணம் செய்துள்ளார் பார்த்திபன். அதன்பின்னர் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வந்த பார்த்திபன் சீதா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஒரு ஆண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்துக் கொண்டனர். ஆனால் ஒரு கட்டத்தில் பார்த்திபனும் சீதாவும் விவாகரத்து செய்து பிரிந்தனர். திருமணம் தன் வாழ்வில் தான் எடுத்த ஒரு மோசமான முடிவு என்று பின்னாளில் சீதா தெரிவித்துள்ளார்.
விவாகரத்து குறித்து சமீபத்தில் பேசிய சீதா “நான்தான் அவரிடம் காதலை சொன்னேன் என அவர் அடிக்கடி சொல்கிறார். ஆனால் அதற்குப் பின்னால் ஒரு உண்மை இருக்கிறது. அவர் அடிக்கடி என்னிடம் பேசும்போதெல்லாம் ‘எப்போது அந்த மூன்று வார்த்தைகளை சொல்லப் போகிறாய்” எனக் கேட்டுக்கொண்டே இருந்தார். அதைப் புரிந்துகொண்டு நான் ஐ லவ் யூ சொல்லும்போது என் அப்பா அதைக் கேட்டு பிரச்சனை ஆரம்பித்தது. இதில் இருந்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் எங்கள் காதல் எப்படி உருவானது என தெரிந்துகொள்ளுங்கள்.
எல்லோரும் எங்கள் விவாகரத்து குறித்து கேட்கிறார்கள். நான் ஒரு சாதாரண பெண். அவரை நான் திருமணம் செய்யும்போது அவரும் பெரிய பணக்காரர் எல்லாம் இல்லை. அதனால் அவரின் சொத்துக்காக எல்லாம் நான் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு படத்தில் சுஹாசினி பாடுவார்கள் இல்லையா “என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்” என்று. அதுபோல நானும் நினைத்தேன். அது என்ன தவறா?,.. ஆனால் அது நடக்காத போதுதான் நாங்கள் பிரிந்தோம்.” எனக் கூறியுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…