நடிகை சரிதா, தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு நடிகையாக, முன்னணி நாயகியாக வலம் வந்தவர். மிக இளம் வயதில் நடிக்க வந்தவர். தமிழில் ரஜினி, கமல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, முகேஷ், தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கன்னடத்தில் ராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்தவர். சரிதா நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் படங்களாக வெற்றி பெற்றன. ஆனால், 15 வயது முடியும் தருணத்தில், வெங்கட சுப்பையா என்ற தெலுங்கு நடிகருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆறேழு மாதங்களிலேயே அவர்களுக்குள் மனமுறிவு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இதன் பின் சிறிது இடைவெளிக்கு பிறகு, மீண்டும் படங்களில் பிஸியாக நடித்தார் சரிதா.
அப்போது மலையாளத்தில் பல படங்களில் சரிதா நடித்த காலகட்டத்தில் மலையாள நடிகர் முகேஷூடன் ஏற்பட்ட பழக்கம், புரிதல் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. 2 ஆண் பிள்ளைகளுக்கு தாயானார் சரிதா. முழுநேர இல்லத்தரசியாக குடும்பத்தை கவனித்துக்கொண்டார். இந்நிலையில் கணவர் முகேஷ்க்கும், சரிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்துக்கு தயாராகினர்.
இதுகுறித்து முகேஷிடம் சிலர் கேட்ட போது, என் பர்சனல் விஷயங்களில், சரிதா அதிகமாக தலையிடுகிறார். நான் யார் படத்தில் நடிக்க வேண்டும், எந்த நடிகையுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றெல்லாம் கண்டிசன் போடுகிறார். என் தொழிலில் அவர் குறுக்கிடுவதை என்னால் ஏற்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். அதன்பின் அவர் நாட்டிய கலைஞர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.
பிறகு சென்னையில், ஜாபர்கான் பேட்டையில் தன் பிள்ளைகளுடன் வந்து குடியிருந்த சரிதா, 2 மகன்களையும் பெரிய அளவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்தார். பாலுமகேந்திரா கேட்டுக்கொண்டதால் ஜூலி கணபதி என்ற படத்தில் மட்டும் நடித்த சரிதா, பின் படங்களில் நடிக்காமல் பல ஆண்டுகளாக விலகி இருந்தார். ஆனால் சினிமாவில் பிரண்ட்ஸ் போன்ற படல படங்களுக்கு புரடக்சன் டிசைனராக சரிதா பணிபுரிந்தார். பல படங்களில் முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் நடிக்க சம்மதித்து, அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். குட்டி ரஜினியாக இருக்கும் சிவகார்த்திகேயனை பிடிக்கும் என்பதால் இந்த படத்தில் நடித்தார் என, ஒரு நேர்காணலில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு இந்த தகவல்களை கூறியுள்ளார்.
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…