கமல் நடிப்பில் வெளியான நாயகன் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். அதன்பிறகு இவர் மனசுக்குள் மத்தாப்பு, சிவப்பு தாலி, அன்று பெய்த மழை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அதன் பிறகு இயக்குனர் பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்குகிறார்கள். அதில் ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது. தற்போது சரண்யா தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். குறிப்பாக தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கின்றார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் நடிப்பையும் தாண்டி டைலரிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனக்குத் தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே பலருக்கும் சொல்லிக் கொடுத்து வந்தார். அதை தற்போது பெரிய லெவலில் டிசாப்ட் என்ற புதிய நிறுவனமாக தொடங்கி இருக்கின்றார்.
இந்த நிறுவனத்தை முதல்வர் அவர்களின் மனைவி துர்காஸ்டாலின் திறந்து வைத்தார். அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனத்துக்கு பல நடிகைகள் கலந்துகொண்டு கலெக்சன்களை பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
