ஹிந்தியில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 404 என்ற திரைப்படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை சாரா அர்ஜுன். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு ஐந்து வயது. அதே ஆண்டு தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். இவர் தமிழில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் தான் முதல் முதலாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்தார்.
இவருக்கும் விக்கிரமுக்கும் இடையேயான தந்தை மகள் உறவை மையமாக வைத்து அந்த திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஐந்து வயதிலேயே இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரே படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உச்சத்திற்கு சென்று விட்டார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.
இதனைத் தொடர்ந்து சைவம், சில்லு கருப்பட்டி, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது 18 வயதாகும் இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டேஷன் கேங் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியாமணி,சன்னி லியோன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கொலை சம்பவத்தை நடத்துவதற்கு ஏலம் விட்டு கொலையாளிகளை தேர்வு செய்வது தான் இந்த படத்தின் கதை. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நடிகை சாரா அர்ஜுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் , தான் மிகவும் பிசியாக இருப்பதால் தன்னால் படத்தின் பிரமோஷனுக்கு வர முடியவில்லை எனவும் அதனால் தான் வருந்துவதாக கூறி மன்னிப்பு கோரி உள்ளார். மேலும் படம் ஆகஸ்ட் 30 வெளியாக உள்ள நிலையில் தான் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருப்பதாகவும் அனைவரும் தவறாமல் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருப்பதாகக் கூறிச்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான ராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், தனது அதிரடிப் பேச்சால் உலக…
அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின்…
சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப்…