தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகியது. சினிமாவின் உச்சத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இதை தொடர்ந்து தனது கெரியரில் கவனம் செலுத்த தொடங்கி, ஆக்டிவாக நடித்துக் கொண்டிருந்தார் நடிகை சமந்தா . ஆனால் திடீரென இவர் மயோசிட்டிஸ் எனும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெறத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து தற்பொழுது அதற்கான சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சகுந்தலம் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைதொடர்ந்து விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த வேலையில் தற்பொழுது மீண்டும் ஒரு தகவல் இணையத்தில் கிசுக்கப்பட்டு வருகிறது. அதாவது நடிகை சமந்தா தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகப் போவதாகவும், இதற்காக அவர் தான் நடிக்க ஒப்பந்தமாக படங்களில் வாங்கிய அட்வான்ஸ் திருப்பி தந்ததாகவும் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது நமக்கு தெரியவில்லை.
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…