தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன.
அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார்.
இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். தற்பொழுது அவர் மயோசிட்டிஸ் நோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.இறுதியாக இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை சமந்தா அணிந்திருப்பது சேலையா? அல்லது மாடர்ன் உடையா என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.