CINEMA
சேற்றை மூஞ்சில பூசி, விஷால் என்னை அப்படி கூப்பிடுவாரு… மாமன்னன் புகழ் நடிகை ரவீனா ஓபன் டாக்..!!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகள் ஏராளம். அந்த வரிசையில் உள்ளவர்தான் நடிகை ரவீனா. இவர் லவ் டுடே திரைப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதனைப் போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாமன்னன் திரைப்படத்திலும் பகத் பாஸில் மனைவியாக நடித்த ரசிகர்களை கவர்ந்தார். அந்தப் படத்தில் இவருக்கு ஒரு டயலாக் கூட இல்லை.
ஆனால் பகத் பாசியில் மற்றும் ரவீனா ரவி இடையே கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ரவீனா தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக உள்ள வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் டப்பிங் கலைஞர் ரவீனா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வீரமே வாகை படப்பிடிப்பின் போது நடிகர் விஷால் என்னை பரதேசி என்றுதான் அழைப்பார். ஏன் அப்படி அழைத்தார் என்று தெரியவில்லை, இருந்தாலும் அவர் என் மீது அதிக அக்கறை காட்டுவார். விஷால் என்னுடைய மூஞ்சில் சேற்றை பூசுவது போல விளையாடுவார். ஆனால் அவரைப் போன்ற ஒருவரை இதுவரை என்னால் பார்க்க முடியாது என்று ரவீனா பேசியுள்ளார்.