தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவரை ரசிகர்கள் அனைவரும் நேஷனல் கிரஷ் என்று கொண்டாடுகிறார்கள். சினிமாவிற்கு முன்பு மாடலிங்கில் இருந்த இவர் தற்பொழுது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடித்த ஸ்ரீவல்லி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.
இப்படி தமிழ் ,ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார் நடிகை ரஷ்மிகா. இவர் சமீபத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஹீரோ பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர். சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்தது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
டீசர் வெளிவந்ததை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் முதல் பாடலை வெளியிடவுள்ளனர். அதற்கான அறிவிப்பு ரன்பீர் கபூர் – ராஷ்மிகா லிப் லாக் ரொமான்டிக் முத்த காட்சி போஸ்டருடன் வெளிவந்துள்ளது. Hua Main என ஹிந்தியில் தலைப்பிட பட்டுள்ள இந்த பாடல் நாளை வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரில் நடிகை ரஷ்மிகா ரன்வீர் கபூரை லிப் லாக் கிஸ் அடிக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘போஸ்டர்லயே இப்படியா? அப்படின்னா படத்துல இன்னும் என்னெல்லாம் இருக்குமோ’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…
சம்பவத்தின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அகர்வால் எரிபொருள் நிலையத்திற்கு வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ…
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…