90களில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா. இவருடைய பல படங்கள் முன்னாடி ஹீரோக்களுடன் அமைந்தது. விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல வெற்றி படங்களை கொடுத்த இவர் கவர்ச்சியுடன் நடிப்பையும் மிக்ஸ் செய்து கொடுத்தவர். அதிலும் குறிப்பாக இவருடைய தொடையழகு ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டது. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் இவருடைய என்ட்ரி மிக சிறப்பாக அமைந்தது. தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய ரம்பா அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ள நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு இவர் நடிப்பில் ஈடுபடவில்லை. திருமணம் ஆகி குடும்பம் மற்றும் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். தன்னுடைய கணவரின் பிசினஸில் உறுதுணையாக இருந்து வருகின்றார். இந்நிலையில் ரம்பா சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயுடன் நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் தேவயானி உடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், நினைத்தேன் வந்தாய் படத்தில் நடிக்கும் போது விஜயை விட எனக்கும் தேவயானிக்கும் தான் பாண்டிங் நன்றாக இருந்தது. அந்தப் படத்துல நடிக்கும் போது தான் நாங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஆகும்.

இருவருமே ஒரே அறையில் தான் ஸ்டே பண்ணுவோம். என்ன படப்பிடிப்பு சமயங்களில் தனியா ஷூட்டிங் எடுக்கும் போது கூட யாருமே இல்லாத மாதிரி இருக்கும். டைரக்டர் சார் கிட்ட கேட்டா இத சீக்கிரமா பண்ணி முடிங்க மதியமா தேவயானி கூட நீங்க சேர்ந்து நடிக்கிற சீன் இருக்கு என்று சொன்னதும் நானும் சீக்கிரமா தனியா நடிக்கிற சீன் நடித்து முடித்துவிடுவேன். அந்த படத்துல அவங்க கூட நான் ரொம்ப க்ளோசா இருந்தேன். அந்தப் படம் அடிச்சுட்டு இருந்த சமயத்துல தேவயானி ஒரு வருஷத்துக்கு 14 படங்கள் வரை பண்ணிட்டு இருந்தாங்க. நான் வருஷத்துக்கு ஏழு படம் தான் நடிப்பேன். அவங்க கிட்ட நான் எப்படி 14 படம் உங்களால பண்ண முடியுது என்று கேட்டதும் அவங்க என்னுடைய ஷூட்டிங் 20 நாட்களில் முடிந்து விடும்.
என்னுடைய ரோல் அத்தனை நாட்கள்தான் ஷூட் பண்ணுவாங்க என்று சொன்னாங்க. எனக்கும் அது மாதிரி கொடுங்க என்று நான் தேவயானி கிட்ட கேட்டதும் உனக்கு நாலு பாட்டு பண்றதுக்கு 20 நாள் ஆகிடும் என்று சொன்னாங்க. அதே மாதிரி உனக்கு அடுத்த ஷூட்டிங் எங்கே என்று எங்கிட்ட அவங்க கேட்டதும் லண்டன் மற்றும் ஸ்விட்சர்லாந்து என்று கூறினேன். நீ மட்டும் எப்படி வெளிநாட்டுக்கு போய் நடிக்கிற எனக்கெல்லாம் அப்படி வரவே மாட்டேங்குது என்று தேவயானி கேட்டாங்க.

நீங்க இப்படி சாரி எல்லாம் போட்டுக்கிட்டு போன்லியா நடிச்சா பொள்ளாச்சி அங்க சுத்தி இருக்கிற கிராமத்தில் தான் உங்களை கூட்டிட்டு போய் நடிக்க வைப்பாங்க. என்ன மாதிரி மாடர்ன் டிரஸ் போடுங்க நிறைய வெளிநாடு போய் படம் நடிக்கலாம் என்று சொன்னேன். அதற்கு அவங்க என்ன மாதிரி ஹோம்லியா நீ நடிச்சு பாரு நீயும் வருஷத்துக்கு 15 படத்துல நடிக்கலாம். இப்படி மாடர்ன் டிரஸ் போட்டுக்கிட்டு நடிச்சா வெளிநாட்டுக்கு ட்ரிப் போறது இல்லையே உனக்கு பாதிநாள் போயிரும். அப்படி இருந்தா வருஷத்துக்கு நாலு படம் தான் நடிக்க முடியும் என்று என்கிட்ட கிண்டலா தேவயானி பேசினாங்க என்று ரம்பா அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
