CINEMA
நடிகை ரம்பா மகனின் 5 -வது பிறந்தநாள் கொண்டாட்டம்…! அதுக்குள்ள இவ்ளோ பெருசா வளந்துட்டாரா…?
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, போஜ்பூரி என்று பல மொழி சினிமாக்களில் நடித்தவர் நடிகை ரம்பா. தமிழ் சினிமாவில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துள்ளார். துடிப்பான இவருடைய நடிப்பு மற்றும் அழகிற்காக ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தார்.
இந்நிலையில் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை 2010 இல் திருமணம் செய்துகொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு ஒருசில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்துவந்தார். தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நடிகை ரம்பாவிற்கு லான்யா, சாஷா, ஷிவின் என்று 3 குழந்தைகள் உள்ளனர்.
இவர் அவ்வபோது தனது இணையதள பக்கத்தில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இன்று நடிகை ரம்பாவின் மகன் தனது 5 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து கூறி கலா மாஸ்டர் பிறந்தநாள் புகைப்படங்களுடன் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.