தெலுங்கு திரை உலகை கடந்த 2017-ஆம் ஆண்டு போதைப்பொருள் விளக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இயக்குனர் பூரி ஜெகநாதன், சார்மி கவுர், ராணா, ரகுல் பிரீத் சிங் உட்பட 12 பிரபலங்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக பூரி ஜெகநாத், சார்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
கடந்த 2021-ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் பண மோசடி குறித்து ரகுல் பிரீத் சிங்கிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே, தேவ், அயலான் உள்ளிட்ட படங்களில் ரகுல் பிரீசிங் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன இந்தியன் 2 படத்திலும் ரகுல் பிரீ சிங் நடித்துள்ளார். தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னாணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத் சிங் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் ராஜேந்திர நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு நைஜீரியர்களிடமிருந்து போதை பொருளை வாங்கிய போது அவரை கைது செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். முன்னதாக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் கொக்கைன் போதை பொருட்களை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.