நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். இவர் 80, 90 காலகட்டங்களில் ரஜினிகாந்த், கமல்,விஜயகாந்த், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் கதாநாயகி வாய்ப்பு குறைத்தபின் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் . அவர் இப்போது உள்ள இளம் தலைமுறை நடிகர்களான சூர்யா, விஜய் , விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.
இவர் வெள்ளித் திரையை அடுத்து சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். இவர் ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் சீரியல்களை இயக்கி தயாரித்து வருகிறார் .இவர் பல சூப்பர் ஹிட் சீரியல்களை அந்த நிறுவனத்தின் மூலம் தந்துள்ளார் .மேலும் அவர் சன் டிவி பல மெகா ஹிட் தொடர்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார்.
இவர் டான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனராகவும் இருக்கிறார் .மேலும் இவர் படங்களில் பிஸியாகவும் நடித்து வருகிறார் . தற்பொழுது அவர் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் சீரியலிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் மீண்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ராதிகா. இவர் அவ்வப்பொழுது தனது குடும்பபுகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராதிகா தனது சிறுவயது முதன் தற்பொழுது வரை தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று திடீரென்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….
மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…
ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…
தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…
ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போல ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்…