தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ராக்ஷி கண்ணா. இவர் 2013ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘மெட்ராஸ் காஃப்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதன்பின்னர் தமிழில் “இமைக்கா நொடிகள்” என்ற படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார் இவர். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வே டத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடித்தான் மூலம் தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் மக்களிடத்தில் பரிச்சியம் ஆன ஒரு நடிகை ஆனார் நடிகை ராஷி கண்ணா என்று தான் சொல்ல வேண்டும்.

இதையடுத்து நடிகர் ஜெயம் ரவியுடன் “அடங்கம று” படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான “சங்கத்தமிழன்” படத்தில் நடித்திருந்தார்.

மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் “திருச்சிற்றம்பலம்” படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இறுதியாக அரண்மனை 4 திரைப்படத்தில் கச்சிதமாக நடித்த ராசி கண்ணா, தற்பொழுது தொடர்ச்சியாக தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது சேலையில் ஓவர் கிளாமர் காட்டி அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

