CINEMA
அட கொடுமையே… மோசடி வழக்கில் சிக்கி கைதாகும் நடிகை நமீதாவின் கணவர்…? அதுவும் இத்தனை லட்சமா…? அதிர்ச்சியில் திரையுலகம்…
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை நமீதா. மிஸ் சூரத், மிஸ் இந்தியா போன்ற பட்டங்களை பெற்றவர் நடிகை நமீதா. விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி, சரத்குமார் போன்றவர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கவை, சாணக்யா, ஆணை, எங்கள் அண்ணா, அழகிய தமிழ் மகன், பில்லா, இந்திர விழா, ஜகன்மோகினி ,பம்பரக் கண்ணாலே ,வியாபாரி, நான் அவனில்லை.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘மியா’. நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் 2017 ஆம் ஆண்டு இந்திய திரைப்பட நடிகரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஒப்பந்தம் செய்த படங்களில் மட்டும் நடித்து முடித்தார். இவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என்று தனது குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளார் நடிகை நமீதா.
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் நமீதா தற்போது பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மோசடி வழக்கில் சிக்கி இருக்கிறார். அவர் MSME ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் தமிழ்நாடு தலைவராக இருக்கிறார். அந்த அமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன் மற்றும் செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் தன்னிடம் 41 லட்சம் ருபாய் வாங்கி ஏமாற்றிவிட்டதாக சேலம் பகுதியை சேர்ந்த கோபால்சாமி என்பவர் புகார் அளித்து இருக்கிறார்.
அந்த வழக்கில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகும் படி நமிதாவின் கணவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது வரை ஆஜராகவில்லை என்பதால் அவரை போலீசார் கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இத்தகவல் தற்பொழுது திரையுலகில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.